Friday, 19 October 2018

கணவன் கடவுளின் தூதன்

கணவா கணவா
கடவுளின் தூதா

கண்ணில் வைத்தா
எனை காத்தாய் கணவா

இல்லை நெஞ்சில் வைத்தா
எனை காத்தாய் கணவா

கனவில் வந்த கணவா
கலைந்த கனவின்  நினைவா

கடலின் அழகிய முத்து  நானா
எனை கண்டெடுத்த முத்து சிற்பி நீயா

தோழனாய்  வந்த  கணவா
தகப்பனாய் மாறிய உறவா

உயிரும் உடலும் இரண்டா
உண்மை நிலையை அறியா

சிறு பேதை பெண்ணும் நானா
இல்லை பதுமை பொம்மையாக

உனை சுற்றி திரியும் மானா
என்னை காக்கும் கடவுளின் தூதா

நீ அறிவாயோ
 நீ அறிவாயோ

நான் தேவதையாய் வந்தா உன் தாயே...
இல்லை சிறு பதுமையாய் வந்த சேயா...

மகிழ்ச்சியின் மலை ஊற்றாய்
சிறு பறவையாய் பறப்போம் வாராய்

கார்த்திகா சுந்தர்














No comments:

Post a Comment