Thursday, 25 October 2018

டெங்கு காய்ச்சல் தடுக்கும் முறை வீட்டு வைத்தியம்

வணக்கம் நண்பர்களே...


டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க வேண்டிய வழி முறைகள் இதோ உங்களுக்காக:





     நம்மை தினமும் கொசுக்கடி பிரச்சனையில் இருந்து விடுபட கொசு மருந்து ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத வகையில் உபயோகிக்க வேண்டும்.

   கொசு வலைகள் கட்டி இரவில் படுத்து தூங்க வேண்டும்.

    நம் வீட்டில் உள்ள அனைத்து ஐன்னல் மற்றும் கதவுகள் மற்றும் இதர கொசு வரும் பாதையை கொசு வலைகள் கொண்டு அடைத்து தைக்க வேண்டும்.



     மழை காலங்களில் தினமும் சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் அல்லது கொசு அதிக அளவில் வரும் நேரங்களில் வேப்பிலை கொண்டு புகை மூட்டம் போட்டு இந்த வாசனை வீடு முழுவதும்  பரவுமாறு செய்யும் போது கொசு அண்டாது.

     இந்த முறையில் நொச்சி இலை பறித்து புகை மூட்டம் போட்டு விட்டு  கொசு அதிக அளவில் வருவதை தடுக்கலாம்.

     நம் குழந்தைகள் தூங்க செல்லும் முன் மற்றும் மாலை வேளைகளில் வெளியில் விளையாடுவதற்க்கு போகும் பொழுதும் முழுகால் மறைக்கும் வகையில் பாவாடை ,போன்ட் மற்றும் முழுகை மேலாடை போன்ற கொசுவிடம் இருந்து பாதுகாக்க கூடிய ஆடைகளை அணிந்து கொண்டு போக வேண்டும்.

     சாயங்காலம்  வேலையில்  அதுவும் 5 மணி முதல் 8 மணி வரை நமது இல்லத்தின் அனைத்து சன்னல் மற்றும் துவாரம், கதவுகளை எல்லாம் அடைத்து வைத்து பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்.

     உங்கள் இல்லங்களைச் சுற்றி உள்ள இடங்களில் எல்லாம்  தண்ணீர் தேங்கிய நிலையில் இல்லாமல் கவனித்து கொள்ள வேண்டியது அவசியம்.

      மழை காலங்களில் குண்டு, குழியில் தண்ணீர் தேங்கிய நிலையில் இல்லாமல் கவனித்து கொள்ள வேண்டும்.
   
     அவ்வாறு தண்ணீர் தேங்கிய நிலையில் உள்ள போது உடனே சுத்தம் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.கொசு முட்டை இடுவதை தவிர்க்க முடியும்.

சுற்றுச்சூழலை தூய்மையான நிலையில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

டெங்கு காய்ச்சல் பின் விளைவு மற்றும் அறிகுறிகள்..

  1. பசி இல்லாமல் இருக்கும்
  2. பல் ஈறுகளிலிருந்து இரத்தம் வடியும்
  3. மாதவிடாய் அதிக அளவில் இருத்தல் 
  4. தொண்டைப்புண்கள்
  5. சிறுநீரில் இரத்தம் கலந்து சிறுநீர் கழிக்கும் நிலை
  6. தோலில் அரிப்பு ஏற்படும்
  7. வெள்ளை அணு எண்ணிக்கைக் குறைய ஆரம்பிக்கும் தலைவலி ஏற்படும்
  8. கண் வலி ஏற்படும்
  9. பொதுவாக உடலில் வலி ஏற்படும்
  10. பலருக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்படும்
  11. தசை வலி உண்டாகும்
  12. மூட்டு வலி ஏற்படும்
  13. குமட்டல் போன்றவை ஏற்படும்
  14. வாந்தியும் இருக்கும்
  15. வயிற்றுக்கடுப்பு உண்டாகும்


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டியவை:



       சாதாரணமாக காய்ச்சல்தானே என எண்ணி அலட்சியமாக  இருந்து விட கூடாது.

       லேசாக காய்ச்சல் இருக்கும் எனில் உடனே அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று  மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

       காய்ச்சல் இருந்தால் நமது உடலுக்கு தேவைப்படும் நீர் சத்து போதுமான அளவு இருத்தல் அவசியம். 

      பழசாறு , பானகங்கள், நீச்சதண்ணி மற்றும் குடிநீர் அருந்தி உடம்பில் உள்ள நீர்ச்சத்து குறையாது கவனமுடன் பார்த்து  கொள்ள வேண்டியது அவசியம்.

     கருப்பு நிறத்தில் மலம் கழிக்கும் நிலை வந்தால் உடனே அரசாங்க  மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

      தலைவலி, காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி போன்றவை ஏற்படும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக   மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

      1 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 4 டம்ளர் அளவு நீர்ச்சத்து உடலுக்கு தேவைப்படும்.
5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 க்ளாஸ் அளவு நீர்ச்சத்து உடலுக்கு தேவைபடும்.

        குழந்தைகள் சோர்வு அடையாது இருக்க உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதன் படி நடக்க வேண்டும்.

       அதிக காய்ச்சல் இருக்கும் போது சரியான கால இடைவெளியில் சிறுநீரை வெளியேற்றுமாறு கவனித்து கொள்ள வேண்டும்.
வீட்டு வைத்தியம்


நிலவேம்பு கஷாயம் வைத்து காலை மாலை என இரு முறை வாரத்திற்கு இரண்டு தடவைகள் 1/2 டம்ளர் பருக வேண்டும்.

 ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இந்த பயனுள்ள தகவல்களை அனைவருக்கும் பகிருங்கள் நண்பர்களே...

வாழ்க வையகம்

கார்த்திகா சுந்தர்.

No comments:

Post a Comment