வயிற்றிலோ ஆறு மாத சிசு
வாசலீலோ அரைஅடி தண்ணீர்
ஏழாமாசம் வளைகாப்பு
எட்டு திக்கும் வெள்ளகாடு
மிதக்கும் மெட்ராஸ் ஊரினிலே
முழுகாமல் நானு மிதக்குறேனே
வளைகாப்புக்கு வந்த சொந்தம்
வாயடச்சு போனதம்மா
சட்டி சட்டியா காப்பு சோறு
வட்டி வட்டியா திண்ண சோறு
எல்லாம் வீணா போனதம்மா
வெள்ளம் வந்து புகுந்ததம்மா
கதிரவன் வெளிச்சம் இல்லையம்மா...
கரண்டு வெளிச்சம் இல்லையம்மா...
கருங்கும் இருட்டு எங்கும்
கண்ணுமுண்ணு தெரியலீங்க
மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து
தலைவாழை விரித்து வைத்து
ஏழு சோறு பந்தி வைச்சு
எட்டு டஜன் விளையலிட்டு
வந்த ஜனம் நனைந்து நடக்க
வாயும் வயிறுமா நா கிடக்க
மழை வெள்ளம் பெருக்கெடுக்க
மெட்ராசோ அதில் மிதக்க
என் தகப்பனோ மகள் கையை பிடிக்க
என் கணவனோ மனைவியை ஏந்த
இருவரும் எனை கைதாங்கலாக
முழுகாமல் இருக்கும் எனை மூழ்கடிக்கும் நீரோ
கருவில் உள்ள குழந்தை இழுத்து வாரி போக
கண்டபடி ஓடும் காட்டு வெள்ளம் போல
இடுப்பு வரை நீண்ட வெள்ளத்தில்
சிசுவும் மிரள தாயும் மிதக்க பள்ளத்தில்
இடராது பக்குவமாக நடக்க
கணவனும் தகப்பனும் நனைக்க
சொந்த பந்தம் எல்லாம் கலங்க
தப்பிபிழைத்து ஊரு போய் சேர
பத்து மாதம் பத்திரமாய்
பிள்ளை பிறந்தது ரத்தினமாய்
மறக்க முடியாத நினைவுகள்
கார்த்திகா சுந்தர்
கார்த்திகா சுந்தர்
வாசலீலோ அரைஅடி தண்ணீர்
ஏழாமாசம் வளைகாப்பு
எட்டு திக்கும் வெள்ளகாடு
மிதக்கும் மெட்ராஸ் ஊரினிலே
முழுகாமல் நானு மிதக்குறேனே
வளைகாப்புக்கு வந்த சொந்தம்
வாயடச்சு போனதம்மா
சட்டி சட்டியா காப்பு சோறு
வட்டி வட்டியா திண்ண சோறு
எல்லாம் வீணா போனதம்மா
வெள்ளம் வந்து புகுந்ததம்மா
கதிரவன் வெளிச்சம் இல்லையம்மா...
கரண்டு வெளிச்சம் இல்லையம்மா...
கருங்கும் இருட்டு எங்கும்
கண்ணுமுண்ணு தெரியலீங்க
மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து
தலைவாழை விரித்து வைத்து
ஏழு சோறு பந்தி வைச்சு
எட்டு டஜன் விளையலிட்டு
வந்த ஜனம் நனைந்து நடக்க
வாயும் வயிறுமா நா கிடக்க
மழை வெள்ளம் பெருக்கெடுக்க
மெட்ராசோ அதில் மிதக்க
என் தகப்பனோ மகள் கையை பிடிக்க
என் கணவனோ மனைவியை ஏந்த
இருவரும் எனை கைதாங்கலாக
முழுகாமல் இருக்கும் எனை மூழ்கடிக்கும் நீரோ
கருவில் உள்ள குழந்தை இழுத்து வாரி போக
கண்டபடி ஓடும் காட்டு வெள்ளம் போல
இடுப்பு வரை நீண்ட வெள்ளத்தில்
சிசுவும் மிரள தாயும் மிதக்க பள்ளத்தில்
இடராது பக்குவமாக நடக்க
கணவனும் தகப்பனும் நனைக்க
சொந்த பந்தம் எல்லாம் கலங்க
தப்பிபிழைத்து ஊரு போய் சேர
பத்து மாதம் பத்திரமாய்
பிள்ளை பிறந்தது ரத்தினமாய்
மறக்க முடியாத நினைவுகள்
கார்த்திகா சுந்தர்
கார்த்திகா சுந்தர்
No comments:
Post a Comment