Wednesday, 31 October 2018

சர்தார் வல்லபாய் படேல்க்கு ஒற்றுமைகான சிலை.

சர்தார் வல்லபாய் படேல்க்கு ஒற்றுமைகான சிலை


          இந்தியாவின் இரும்பு மனிதர் என்று பெருமையோடு நம் அனைவராலும் அழைக்கப்படுபவர்.


          இந்தியாவின் முதல் முதலாவது உள்துறை மந்திரியான நம் சர்தார் வல்லபாய் படேல் அவர்களுக்கு இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு அதிபிரமாண்டமான உருவசிலை அமைக்கப்பட்டுள்ளது. 
          
          நர்மதா சரோவர் அணையின் அருகில் சாது பேட் என்கிற சிறுதீவில் சர்தார் சிலையை அமைக்கப்பட்டுள்ளது.

          சர்தார்  வல்லபாய் படேல் நினைவாக குஜராத்தில் இருக்கிற நர்மதா நதிக்கரையில் அவருடைய 143 வது பிறந்த நாள் தினத்தில் ஒற்றுமைக்கான சிலை அமைக்கப்பட்டுள்ளது.

          நம் பாரத பிரதமர் மோடி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இந்த சர்தார் வல்லபாய் படேல் திருஉருவசிலை உலகிலேயே மிக அதிக உயரம் கொண்ட சிலை என்பது குறிப்பிடத்தக்கது.இதன் அளவு 182 மீட்டர் ஆகும்.



          நம் சர்தார் வல்லபாய் படேல் இந்திய நாட்டினை ஒன்றுபடுத்தியதை குறிப்பிட தக்க வகையில்  ‘ஒற்றுமைக்கான சிலை’ என அனைவராலும் பெருமையோடு அழைக்கப்படுகிறது.

சிலையின் விவரங்கள்

          சர்தார் சிலையின் உயரம் 182 மீட்டர். உலகில் மிக உயரம் கொண்ட சிலையாக சர்தார் வல்லபாய் படேல் சிலை அழைக்கப்படுகிறது.



         மிக குறிப்பிடத்தக்க வகையில் அமெரிக்காவில் இருக்கிற சுதந்திர தேவி சிலையை விடவும் 2 மடங்கு உயரம் உடையது.

         சர்தார் சிலையை வடிவமைக்க 70 ஆயிரம் டன் சிமெண்ட் மற்றும் ஆயிரக்கணக்கான டன் எக்கு போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளது. படேல் சிலையினுடைய வெளிப்புற அழகு பூச்சுக்காக 1,700 டன் வெண்கலம் உபயோகபடுத்தப்பட்டுள்ளது.

          சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளையொட்டி, இந்த பிரம்மாண்டமான சிலையை நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்து இந்திய நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். 

          சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தவுடன், நம் இந்திய விமானப்படைக்கு உரிய மூன்று விமானங்கள் வானத்தில் பறந்து சென்று, தேசிய கொடியின் மூன்று வண்ணங்களால் ஆன கலர் பொடிகளை வானில் தூவி, வானில் தேசிய கொடியை உருவாக்கி பறந்தன.

          இந்திய நாட்டின் ஒற்றுமையை குறிக்கும் வகையில் சர்தார் வல்லபாய் படேல் சிலையின் அருகே அமைக்கப்பட்டு உள்ள ஒற்றுமை சுவரை பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார். 

          அந்த நேரத்தில் மூன்று இந்திய போர் விமானங்கள், அந்த சுவரின் மேலே சற்று தாழ்வாக பறந்து சென்றது. படேல் சிலைக்கு பிரதமர் அவர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அந்த தருணத்தில், மி-17 ரகத்தை சேர்ந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் கொண்டு சர்தார் வல்லபாய் படேல் சிலையின் மீது மலர்கள் தூவிவிடப்பட்டது. 

சிலை திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது;-

            சர்தார்  வல்லபாய் படேல் சிலையை திறந்து வைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.


         நம்  இந்தியாவை உருவாக்கியவர், சர்தார் வல்லபாய் படேல். இந்தியர்களாகிய நம் அனைவருக்கும் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு வாய்ந்த தருணம் ஆகும். நான் இந்த பிரம்மாண்டமான சர்தார் திருவுருவ சிலையை திறந்து வைத்ததை மிகவும் கவுரவமாக எண்ணுகிறேன்.

           குஜராத்தின் முதல்வராக இருந்த காலத்தில் இந்த முயற்சி தொடங்கப்பட்டது. அரசு தொடங்கிய இந்த சிறந்த முயற்சிக்கு இந்தியா முழுவதும் இருந்து பல விவசாயிகள் நல்ல ஆதரவு அளித்தனர்.
    
          பல லட்சக்கணக் விவசாயி மக்கள், தங்களுடைய விவசாய கருவிகள் இரும்பு மற்றும் மணலை சிலை தயாரிக்க கொடுத்தனர் என்று  கூறி பேசினார்.

          நம் பாரத இந்தியாவை ஒரே தேசமாக ஒருங்கிணைத்தவர் வல்லபாய் படேல். இந்தியர்கள் அனைவரும் இந்த பொன்னான தருணத்தை மகிழ்ந்து கொண்டாடி வருகின்றார்கள். அன்று சர்தார் படேலின் பெரும் முயற்சிகள் தான் இன்றைய நமது ஒன்றுபட்ட இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

           சுதந்திரம் பெற்றதும், படேல் எடுத்த முயற்சிகள் தான் இவை. இந்த விழா, இந்திய நாட்டின் வரலாற்றில் மிகமிக முக்கியமான சிறப்பு வாய்ந்த விழாவாக கொண்டாடப்படுகிறது.

          சுதந்திர இந்தியாவை சர்தார் வல்லப்பாய் படேல் ஒருங்கிணைத்த சிற்பி என அழைக்கப்படுகிறார். 500 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை  எல்லாம் இவர் ஒருங்கிணைத்து இன்றைய ஒற்றுமையான ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கி உள்ளார். 
  
          சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று எல்லோராலும் பெருமையோடு  அழைக்கப்படுகிறார்.

          நாமும் அவரது கொள்கைகளை பின்பற்றி இந்த இந்திய தேசத்தின் ஒற்றுமைக்கு வழிகோலும் வகையில் என்றென்றும் நாட்டின் நலனுக்காக பாடுபடுவோம். நாட்டின் இறையாண்மை காப்போம்.

          வாழ்க பாரதம்
          ஜெய்கிந்
கார்த்திகா சுந்தர்

No comments:

Post a Comment