Wednesday, 31 October 2018

சர்தார் வல்லபாய் படேல்க்கு ஒற்றுமைகான சிலை.

சர்தார் வல்லபாய் படேல்க்கு ஒற்றுமைகான சிலை


          இந்தியாவின் இரும்பு மனிதர் என்று பெருமையோடு நம் அனைவராலும் அழைக்கப்படுபவர்.


          இந்தியாவின் முதல் முதலாவது உள்துறை மந்திரியான நம் சர்தார் வல்லபாய் படேல் அவர்களுக்கு இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு அதிபிரமாண்டமான உருவசிலை அமைக்கப்பட்டுள்ளது. 
          
          நர்மதா சரோவர் அணையின் அருகில் சாது பேட் என்கிற சிறுதீவில் சர்தார் சிலையை அமைக்கப்பட்டுள்ளது.

          சர்தார்  வல்லபாய் படேல் நினைவாக குஜராத்தில் இருக்கிற நர்மதா நதிக்கரையில் அவருடைய 143 வது பிறந்த நாள் தினத்தில் ஒற்றுமைக்கான சிலை அமைக்கப்பட்டுள்ளது.

          நம் பாரத பிரதமர் மோடி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இந்த சர்தார் வல்லபாய் படேல் திருஉருவசிலை உலகிலேயே மிக அதிக உயரம் கொண்ட சிலை என்பது குறிப்பிடத்தக்கது.இதன் அளவு 182 மீட்டர் ஆகும்.



          நம் சர்தார் வல்லபாய் படேல் இந்திய நாட்டினை ஒன்றுபடுத்தியதை குறிப்பிட தக்க வகையில்  ‘ஒற்றுமைக்கான சிலை’ என அனைவராலும் பெருமையோடு அழைக்கப்படுகிறது.

சிலையின் விவரங்கள்

          சர்தார் சிலையின் உயரம் 182 மீட்டர். உலகில் மிக உயரம் கொண்ட சிலையாக சர்தார் வல்லபாய் படேல் சிலை அழைக்கப்படுகிறது.



         மிக குறிப்பிடத்தக்க வகையில் அமெரிக்காவில் இருக்கிற சுதந்திர தேவி சிலையை விடவும் 2 மடங்கு உயரம் உடையது.

         சர்தார் சிலையை வடிவமைக்க 70 ஆயிரம் டன் சிமெண்ட் மற்றும் ஆயிரக்கணக்கான டன் எக்கு போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளது. படேல் சிலையினுடைய வெளிப்புற அழகு பூச்சுக்காக 1,700 டன் வெண்கலம் உபயோகபடுத்தப்பட்டுள்ளது.

          சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளையொட்டி, இந்த பிரம்மாண்டமான சிலையை நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்து இந்திய நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். 

          சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தவுடன், நம் இந்திய விமானப்படைக்கு உரிய மூன்று விமானங்கள் வானத்தில் பறந்து சென்று, தேசிய கொடியின் மூன்று வண்ணங்களால் ஆன கலர் பொடிகளை வானில் தூவி, வானில் தேசிய கொடியை உருவாக்கி பறந்தன.

          இந்திய நாட்டின் ஒற்றுமையை குறிக்கும் வகையில் சர்தார் வல்லபாய் படேல் சிலையின் அருகே அமைக்கப்பட்டு உள்ள ஒற்றுமை சுவரை பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார். 

          அந்த நேரத்தில் மூன்று இந்திய போர் விமானங்கள், அந்த சுவரின் மேலே சற்று தாழ்வாக பறந்து சென்றது. படேல் சிலைக்கு பிரதமர் அவர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அந்த தருணத்தில், மி-17 ரகத்தை சேர்ந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் கொண்டு சர்தார் வல்லபாய் படேல் சிலையின் மீது மலர்கள் தூவிவிடப்பட்டது. 

சிலை திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது;-

            சர்தார்  வல்லபாய் படேல் சிலையை திறந்து வைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.


         நம்  இந்தியாவை உருவாக்கியவர், சர்தார் வல்லபாய் படேல். இந்தியர்களாகிய நம் அனைவருக்கும் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு வாய்ந்த தருணம் ஆகும். நான் இந்த பிரம்மாண்டமான சர்தார் திருவுருவ சிலையை திறந்து வைத்ததை மிகவும் கவுரவமாக எண்ணுகிறேன்.

           குஜராத்தின் முதல்வராக இருந்த காலத்தில் இந்த முயற்சி தொடங்கப்பட்டது. அரசு தொடங்கிய இந்த சிறந்த முயற்சிக்கு இந்தியா முழுவதும் இருந்து பல விவசாயிகள் நல்ல ஆதரவு அளித்தனர்.
    
          பல லட்சக்கணக் விவசாயி மக்கள், தங்களுடைய விவசாய கருவிகள் இரும்பு மற்றும் மணலை சிலை தயாரிக்க கொடுத்தனர் என்று  கூறி பேசினார்.

          நம் பாரத இந்தியாவை ஒரே தேசமாக ஒருங்கிணைத்தவர் வல்லபாய் படேல். இந்தியர்கள் அனைவரும் இந்த பொன்னான தருணத்தை மகிழ்ந்து கொண்டாடி வருகின்றார்கள். அன்று சர்தார் படேலின் பெரும் முயற்சிகள் தான் இன்றைய நமது ஒன்றுபட்ட இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

           சுதந்திரம் பெற்றதும், படேல் எடுத்த முயற்சிகள் தான் இவை. இந்த விழா, இந்திய நாட்டின் வரலாற்றில் மிகமிக முக்கியமான சிறப்பு வாய்ந்த விழாவாக கொண்டாடப்படுகிறது.

          சுதந்திர இந்தியாவை சர்தார் வல்லப்பாய் படேல் ஒருங்கிணைத்த சிற்பி என அழைக்கப்படுகிறார். 500 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை  எல்லாம் இவர் ஒருங்கிணைத்து இன்றைய ஒற்றுமையான ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கி உள்ளார். 
  
          சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று எல்லோராலும் பெருமையோடு  அழைக்கப்படுகிறார்.

          நாமும் அவரது கொள்கைகளை பின்பற்றி இந்த இந்திய தேசத்தின் ஒற்றுமைக்கு வழிகோலும் வகையில் என்றென்றும் நாட்டின் நலனுக்காக பாடுபடுவோம். நாட்டின் இறையாண்மை காப்போம்.

          வாழ்க பாரதம்
          ஜெய்கிந்
கார்த்திகா சுந்தர்

Monday, 29 October 2018

தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கும் நேரம் 2018

தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கும் நேரம்  2018


     அனைத்து மக்களும் இனிய தீப திருநாள் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

      இந்த ஆண்டு தீப திருநாள் அன்று மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட பல நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.

     தீப திருநாளில்  பட்டாசுகள் வெடித்து மகிழ உத்தரவிடப்பட்ட கால நேரம் தொடர்பாக நம் தமிழக அரசு தற்போது மனுவை தாக்கல் செய்து உள்ளது.
      
          இந்தியா நாடு முழுதும் பட்டாசுகள் வெடித்து மகிழ தடை விதிக்க வேண்டி கோரியை முன் வைத்து போடப்பட்ட வழக்குகளை எல்லாம் நம் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி உள்ளது. 
     
           இத்தகைய வழக்கு விசாரணை முடிவில் நீதிமன்றம் பட்டாசுகள் தயாரிக்கவும், அவர்கள் பட்டாசுகளை விற்கவும் செய்யலாம்.

         பட்டாசுகள் போட தடை எதுவும் இல்லை என்று நீதிமன்றம் உத்தரவு போட்டுவிட்டது.
ஏகப்பட்ட தடைகள் மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள்  விதித்துள்ளது. 

         அது என்னவென்றால் தீப திருநாளில் இரவு நேரத்தில் 8 மணிக்கு தொடங்கி 10 மணி அளவு வரை பட்டாசுகள் வெடிக்கலாம்.

          மொத்தம் 2 மணி நேரம் மட்டும் அனைவரும் பட்டாசுகள் வெடிக்கலாம். அதுவும் வெடிக்கப்படும் ஒவ்வொரு வெடிகளும் அரசு அனுமதி வழங்கிய அளவுகளில்  மட்டுமே இருத்தல் கட்டாயமாகும்.

          பட்டாசுகள் வெடிக்கும் போது ஏற்படும் சத்தம் ஒலி மாசு மற்றும் சுற்றுச்சூழலின் பாதிப்பு  ஆகியவை குறித்து அதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டாயம் அளவீடு செய்ய வேண்டும். 

         சுற்றுச்சூழலுலின் பாதுகாப்பு கருதி மாசு ஏற்படுத்தாத வகையில் பட்டாசுகள் தயாரிக்க தக்க நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும்.

          அரசு தடை விதித்ததுள்ள எந்த ஒரு வகை பட்டாசுகளையும் பொது மக்கள் வெடிக்க அனுமதி கிடையாது என முக்கிய கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு நீதிமன்றம் விதித்துள்ளது. 

          இத்தகைய சூழ்நிலையில் இந்த வருடம் தீப திருநாள் அன்று மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட  2 மணி நேரங்களுக்கு பதிலாக மேலும் அதிகபடியாக நேரம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து உச்சநீதிமன்றத்தில் நம் தமிழக அரசு மனுவை தாக்கல் செய்துவிட்டது.

          தீப திருநாள் அன்று காலை 4 மணி முதல் 6 மணி வரை அதிகாலை வேளையில் பட்டாசு வெடித்து கொண்டாட  அனுமதி வழங்க வேண்டும் என்று அரசு நீதிமன்றத்திற்கு  வலியுறுத்தல் செய்துள்ளது.

         மக்கள் இந்த ஆண்டு தீப திருநாள் கொண்டாட்டதில் பல மாற்றங்களை கடைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

         அனைவரும் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.எனவே அளவான பட்டாசுகள் வெடித்து மாசு வெளிப்பாடு குறையும் வகையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட வேண்டும். 

          குழந்தைகள் மிகவும் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடித்து கொண்டாட பெற்றோர்கள் உதவ வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும். 
          
          அனைவருக்கும் பாதுகாப்பான இனிய தீப திருநாள் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

கார்த்திகா சுந்தர்.

         

Friday, 26 October 2018

நிலவேம்பு யாரெல்லாம் குடிக்கக்கூடாது ,கசாயம் செய்முறை, சாப்பிடும் முறை




நில வேம்பு கஷாயம் யாரெல்லாம் குடிக்கவே கூடாது என பார்க்கலாம்


   
        1வயது முதல் 7வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகள் கட்டாயம் நிலவேம்பு கசாயத்தை மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் பருக கொடுக்க கூடாது.
      இதே போல தான்  காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து வாந்தியும் வயிற்றுவலியும் ஏற்பட்டு கஷ்டப்படும் நபருக்கு நிலவேம்பு கசாயம் தரவே கூடாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இது நில வேம்பு மூலிகை இலையின் படம்.



நில வேம்பு கசாயம் செய்முறை

1ஸ்பூன் நில வேம்பு கசாய பொடி

இரண்டு டம்ளர் தண்ணீர்

     ஒரு பாத்திரத்தில் போட்டு தொடர்ந்து
15 நிமிடங்கள் கொதிக்க  வைத்து விட வேண்டும்.
     
     பின் சிறிது நேரத்தில் நன்கு ஆறியதும் சுத்தமான பருத்தி துணி பயன்படுத்தி நன்கு வடிகட்டி  50 மில்லி அளவு பருகவும்.
  
     இந்த நில வேம்பு மூலிகை கஷாயத்தை காலை மற்றும் மாலை என இரண்டு தடவைகள் குடிக்க வேண்டும்.

நில வேம்பு கஷாயம் யாரெல்லாம் குடிக்க வேண்டும் என பார்க்கலாம்

     உங்கள் இல்லத்தில்  யவருக்காது  டெங்கு காய்ச்சல் வந்தது என அறிந்த உடனே இல்லத்தில் இருக்கும் மற்றவர்களும் அவருடன் இனணந்து நிலவேம்பு கசாயம் குடிக்க வேண்டும். 

     யாரெல்லாம்  காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக காய்ச்சல் வந்த நாளே தாமதிக்காமல் நிலவேம்பு கசாயம் செய்து குடிக்க வேண்டும். 

     இவை அனைத்தும் மருத்துவர் பரிந்துரையை கேட்டு செய்ய வேண்டும்.

நிலவேம்பு கசாயம் எவ்வாறு சாப்பிட வேண்டும்?

     நில வேம்பு கஷாயம் பருக எந்த வித பத்தியம் இருக்க வேண்டிய அவசியமில்லை.

    இந்த கசாயத்தை தினமும் காலை குடிக்க வேண்டும்.அதுவும் எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 

     ஒருவேளை நீங்கள் காலை உணவு சாப்பிட்டு இருக்கும் பட்சத்தில் காலை உணவு சாப்பிட பிறகு ஒரு மணி நேரம் கழித்த பின்தான் கஷாயம் பருக வேண்டும். 

     10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் 30 மில்லி அளவும்  10வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் 50 மில்லி அளவும் பருகலாம்.  

      நில வேம்பு கசாயம் பருகிய பிறகு ஒரு மணி நேரம் கழித்த பிறகு வழக்கமாக சாப்பிடும் உணவுவை உண்ண வேண்டும்.

    நில வேம்பு கசாயத்தின் அத்தனை மருந்துவ பலன்கள் முழுவதையும் நம் உடல் பெறுவதற்கு , கசாயம் பருகிய அன்று எளிதில் செரிமானம்  ஆக  கூடிய சைவ உணவினை சாப்பிட வேண்டும்.     

     நில வேம்பு கசாயம் பருகிய தினத்தில் அசைவ உணவுகள் சாப்பிட கூடாது.

சாப்பிட கூடாத உணவுகள்

மீன்
முட்டை 
கோழிக்கறி 
கருவாடு
பாகற்காய்
அகத்திக் கீரை 
ஆகிய உணவு வகைகள் தவிர்க்க வேண்டிவை ஆகும். 

அரசு மருத்துவமனைகள்
ஆரம்ப சுகாதார மையங்கள்
அரசு சித்த மருத்துவ பிரிவுகளில்  நிலவேம்புக் கசாயம் பொது மக்களுக்கு இலவசமாக கொடுக்கபடுகிறது.   

      டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தால் சித்த மருத்துவரின் ஆலோசனை கேட்டு நிலவேம்புக் கசாயம் மருந்தை உட்கொண்டால் டெங்கு காய்ச்சல் முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்.   

     நில வேம்பு கசாயம் டெங்கு காய்ச்சல்  மட்டும் இன்றி நமது உடலில் இன்னும் பல தீர்வு தருகிறது.

தீர்வு தரும் பிரச்சினைகள்

வயிற்று பெரும்மல்
காய்ச்சல்
சர்க்கரை அளவு
ரத்த அழுத்தம்
மஞ்சள் காமாலை
மலச்சிக்கல்

 போன்றவற்றையும் கட்டுப்படுத்த முடியும். 

 சாதாரணமாக காய்ச்சல் பாதிப்பு இல்லாத நாட்களிலும் நாம் அனைவரும் நிலவேம்புக் கசாயத்தை எடுத்து கொள்ளலாம். 


நிலவேம்பு கசாயத்தை தினம்  எத்தனை தடவை குடிக்க வேண்டும்  

     டெங்கு காய்ச்சல் உள்ளவர்கள் தினமும் 2 தடவை  30 மில்லி முதல் 50 மில்லி வரை தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு கசாயம் குடிக்க வேண்டும்.      

     காய்ச்சல் இல்லாதவர்கள்  தினமும் 1 முறை 7 நாடகள் நிலவேம்பு கசாயம் குடிக்க வேண்டும். 

     நிலவேம்பு கசாயம் நம் உடலுக்கு அனைத்து வைரஸ் காய்ச்சல்களையும் வராமல் தடுத்து கட்டுப்படுத்த செய்கிறது.

     நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலுக்கு நன்மை பயக்கும்.     

மிக சிறந்த மூலிகை நிலவேம்பு.

கார்த்திகா சுந்தர்.

Thursday, 25 October 2018

டெங்கு காய்ச்சல் தடுக்கும் முறை வீட்டு வைத்தியம்

வணக்கம் நண்பர்களே...


டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க வேண்டிய வழி முறைகள் இதோ உங்களுக்காக:





     நம்மை தினமும் கொசுக்கடி பிரச்சனையில் இருந்து விடுபட கொசு மருந்து ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத வகையில் உபயோகிக்க வேண்டும்.

   கொசு வலைகள் கட்டி இரவில் படுத்து தூங்க வேண்டும்.

    நம் வீட்டில் உள்ள அனைத்து ஐன்னல் மற்றும் கதவுகள் மற்றும் இதர கொசு வரும் பாதையை கொசு வலைகள் கொண்டு அடைத்து தைக்க வேண்டும்.



     மழை காலங்களில் தினமும் சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் அல்லது கொசு அதிக அளவில் வரும் நேரங்களில் வேப்பிலை கொண்டு புகை மூட்டம் போட்டு இந்த வாசனை வீடு முழுவதும்  பரவுமாறு செய்யும் போது கொசு அண்டாது.

     இந்த முறையில் நொச்சி இலை பறித்து புகை மூட்டம் போட்டு விட்டு  கொசு அதிக அளவில் வருவதை தடுக்கலாம்.

     நம் குழந்தைகள் தூங்க செல்லும் முன் மற்றும் மாலை வேளைகளில் வெளியில் விளையாடுவதற்க்கு போகும் பொழுதும் முழுகால் மறைக்கும் வகையில் பாவாடை ,போன்ட் மற்றும் முழுகை மேலாடை போன்ற கொசுவிடம் இருந்து பாதுகாக்க கூடிய ஆடைகளை அணிந்து கொண்டு போக வேண்டும்.

     சாயங்காலம்  வேலையில்  அதுவும் 5 மணி முதல் 8 மணி வரை நமது இல்லத்தின் அனைத்து சன்னல் மற்றும் துவாரம், கதவுகளை எல்லாம் அடைத்து வைத்து பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்.

     உங்கள் இல்லங்களைச் சுற்றி உள்ள இடங்களில் எல்லாம்  தண்ணீர் தேங்கிய நிலையில் இல்லாமல் கவனித்து கொள்ள வேண்டியது அவசியம்.

      மழை காலங்களில் குண்டு, குழியில் தண்ணீர் தேங்கிய நிலையில் இல்லாமல் கவனித்து கொள்ள வேண்டும்.
   
     அவ்வாறு தண்ணீர் தேங்கிய நிலையில் உள்ள போது உடனே சுத்தம் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.கொசு முட்டை இடுவதை தவிர்க்க முடியும்.

சுற்றுச்சூழலை தூய்மையான நிலையில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

டெங்கு காய்ச்சல் பின் விளைவு மற்றும் அறிகுறிகள்..

  1. பசி இல்லாமல் இருக்கும்
  2. பல் ஈறுகளிலிருந்து இரத்தம் வடியும்
  3. மாதவிடாய் அதிக அளவில் இருத்தல் 
  4. தொண்டைப்புண்கள்
  5. சிறுநீரில் இரத்தம் கலந்து சிறுநீர் கழிக்கும் நிலை
  6. தோலில் அரிப்பு ஏற்படும்
  7. வெள்ளை அணு எண்ணிக்கைக் குறைய ஆரம்பிக்கும் தலைவலி ஏற்படும்
  8. கண் வலி ஏற்படும்
  9. பொதுவாக உடலில் வலி ஏற்படும்
  10. பலருக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்படும்
  11. தசை வலி உண்டாகும்
  12. மூட்டு வலி ஏற்படும்
  13. குமட்டல் போன்றவை ஏற்படும்
  14. வாந்தியும் இருக்கும்
  15. வயிற்றுக்கடுப்பு உண்டாகும்


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டியவை:



       சாதாரணமாக காய்ச்சல்தானே என எண்ணி அலட்சியமாக  இருந்து விட கூடாது.

       லேசாக காய்ச்சல் இருக்கும் எனில் உடனே அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று  மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

       காய்ச்சல் இருந்தால் நமது உடலுக்கு தேவைப்படும் நீர் சத்து போதுமான அளவு இருத்தல் அவசியம். 

      பழசாறு , பானகங்கள், நீச்சதண்ணி மற்றும் குடிநீர் அருந்தி உடம்பில் உள்ள நீர்ச்சத்து குறையாது கவனமுடன் பார்த்து  கொள்ள வேண்டியது அவசியம்.

     கருப்பு நிறத்தில் மலம் கழிக்கும் நிலை வந்தால் உடனே அரசாங்க  மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

      தலைவலி, காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி போன்றவை ஏற்படும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக   மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

      1 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 4 டம்ளர் அளவு நீர்ச்சத்து உடலுக்கு தேவைப்படும்.
5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 க்ளாஸ் அளவு நீர்ச்சத்து உடலுக்கு தேவைபடும்.

        குழந்தைகள் சோர்வு அடையாது இருக்க உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதன் படி நடக்க வேண்டும்.

       அதிக காய்ச்சல் இருக்கும் போது சரியான கால இடைவெளியில் சிறுநீரை வெளியேற்றுமாறு கவனித்து கொள்ள வேண்டும்.
வீட்டு வைத்தியம்


நிலவேம்பு கஷாயம் வைத்து காலை மாலை என இரு முறை வாரத்திற்கு இரண்டு தடவைகள் 1/2 டம்ளர் பருக வேண்டும்.

 ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இந்த பயனுள்ள தகவல்களை அனைவருக்கும் பகிருங்கள் நண்பர்களே...

வாழ்க வையகம்

கார்த்திகா சுந்தர்.

Wednesday, 24 October 2018

வீட்டில் இருந்து மாதம் 60000ரூ சம்பாதிப்பது எப்படி

வணக்கம் நண்பர்களே
மலரட்டும் புன்சிரிப்பு
வாழ்க வையகம்

தினம் தினம் வீட்டில் இருந்து வேலை செய்யும் அறிய வாய்ப்பு உள்ளது. பெண்கள் ஆண்கள் என அனைவரும் எளிதாக உங்கள் சொந்த முயற்சியில் வெற்றி பெற முடியும்.

இதற்கு நான் மிக எளிய முறையில் தொழில் தொடங்க மிக அருமையான வழி முறைகளை பகிர்கிறேன்.

வீட்டில் இருந்து மாதம் 60000ரூ சம்பாதிப்பது எப்படி என்று பார்ப்போம்.

இதற்கு தையல் இயந்திரம் தேவை. சுடிதார் மட்டுமே தைக்க தெரிந்தால் போதும்.

தினம் தினம் 4 சுடிதார் மட்டுமே தைக்க வேண்டும். போதும். ஒவ்வொரு சுடிதார் தைக்க உங்களுக்கு தேவையான நேரத்தை பார்க்கலாம்.

அளவு எடுத்து துணிகளை எடுத்து வெட்ட தேவையான நேரம் 20 நிமிடங்கள்.

சுடிதார் தைக்க தேவையான நேரம் ஒரு மணிநேரம் அதிகபட்சம் தேவைப்படும்.

மீதி பத்து நிமிடம் நாடா கயிறு கோர்த்து மணிகள் ஏதாவது வைத்து அழகு படுத்தும் விதமான வேலை செய்யுங்கள்.

வருமானம்
ஒரு சுடிதார் தைக்க கூலி 500 ரூபாய்
ஒரு நாளைக்கு வெறும் 4 சுடிதார்
ஒரு நாளைக்கு 2000 ரூபாய்

வேலை செய்யும் நேரம்  6 மணி நேரம்




இவை மாதிரி படங்கள்.
இணையத்தில் நிறைய மாதிரி படங்கள் எல்லாம் கிடைக்கும்.

நிறைய தகவல்கள் உங்களுக்கான பயிற்சிக்கு உதவும்.

உங்கள் கடின உழைப்பு என்பது உங்கள் சொந்த முயற்சியில் ஈடுபாடு கொண்டு வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும்.

மாதம் 60000 முதல் 100000 ரூபாய் வரை வீட்டில் இருந்து மாதம் சம்பாதிக்க முடியும்.

உங்கள் விடமுயற்சி தன்னம்பிக்கை போதும் எளிதில் சம்பாதிக்க முடியும்.

இப்போது நாம் அனைவரும் தீபாவளி திருநாள் பண்டிகை எதிர்பார்த்து காத்திருக்கும் அரிய நாட்கள்.

பண்டிகை காலங்களில் அதிக அளவில் தைக்க ஆட்கள் தேவை என அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையை நாம் பென்னான வாய்ப்பாக அமைத்து அதில் அதிக அளவில் வருமானம் ஈட்ட வேண்டும்.

நிறைய ஆர்டர்கள் கிடைக்க அதிக அளவில் தைக்க வாய்ப்பு உள்ளது.

ஒரு லையநிங் சுடிதார் தைக்க உங்களுக்கு தேவையான நேரத்தை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

லேஸ் வைத்து தைக்க தனி கூலி கிடைக்கும்.
கற்கள் மற்றும் எம்பிராய்டரி செய்ய கூடுதல் கூலி கிடைக்கும்.

புதிதாக தைக்க பழகும் போது இரண்டு மாதங்கள் வரை வீட்டில் யூ டுயூப் மூலம் கற்கவும் கற்பிக்கவும் வாய்ப்பு உள்ளது.

புதிதாக தைக்க பழகும் போது செலவுகள் அதிகரிக்கும் என அனைவரும் அறிந்ததே.

ஆனால் நான் கூறிய யோசனை படி சுயமாக கற்றல் முறை எளிதாக இருக்கும். நீங்கள் தையல் வீடியோ பார்க்க பார்க்க எளிதாக கற்க முடியும்.

சுயமாக தொழில் தொடங்க சிறந்த யோசனைகள் இது என நம்புகிறேன்.

அனைவரும் எளிதாக உங்கள் சொந்த உழைப்பில் முன்னேற வாழ்த்துக்கள்.

மகிழ்ச்சியுடன் முன்னேற்ற பாதையில் செல்ல அனைத்து நலமும் வளமும் பெற்று இறை ஆசியுடன் நல்லதொரு வாழ்வு வாழ பிரார்த்திக்கிறேன்.


மேலும் நிறைய அருமையான பயனுள்ள புதிய தகவல்கள் உங்களுக்காக.... நமது தண்டோரா தமிழச்சி ல்.
 கார்த்திகா சுந்தர்.

நன்றிகள் பல
வணக்கம் நண்பர்களே...


தீபாவளி தல தீபாவளி


இல்லங்கள் தோறும் தீபாவளி
இனியதாய் மகிழும் தீபாவளி...

ஊரே வெடிக்கும் பட்டாசு
புதுமாப்பிள்ளையோ இங்கு மிட்டாசு


புத்தாடை அணிந்து ஜொலிஜொலிப்பு
மத்தாப்பு போட்டு கலகலப்பு...

புதுமாப்பிள்ளை மிடுக்கு ஏராளம்
மாமியார் கவனிப்போ தாராளம்
தலதீபாவளி கொண்டாட்டம்

கார்த்திகா சுந்தர்

Tuesday, 23 October 2018

கண்ணில் எடுத்த போட்டா


குட்டி தேவதை
ஊஞ்சல் ஆடும் அழகை
போட்டா எடுக்க செல்லி
அப்பாக்கு கட்டளையிட்டது

அப்பா போன்ல எடுக்கிற போட்டா
என்னைக்கினா அழிஞ்சுருது

அப்பா கண்ல எடுக்கிற போட்டா
என்னைக்கும் அழியாது

அப்பா பொண்ணு எடுக்கிற போட்டா
என்றைக்கும் அழகானது

என பேசிகொள்ளும்  சிறு பேச்சு அழகு.....
கார்த்திகா சுந்தர்

காணா போச்சு தபால் பெட்டி

பற்பல சொற்கள்
பற்பல சந்தோசங்கள்
பற்பல சங்கடங்கள்
பற்பல கண்ணீர்கள்
பற்பல கதைகள்
எல்லாம் சுமந்து கொண்டு
வெயில் மழை என பாராது
நமக்கான சேதியை பத்திரமாய்
சுமந்து கொண்டு இருந்த
தபால் பெட்டி இன்று
இணையத்தால் இணைந்த நம்மால்
தகவல் ஏதும் இல்லாமல்
 தொலைந்து போனதே...
கார்த்திகா சுந்தர்



கரிசட்டி

சட்டி சட்டி கரிசட்டி
கறி சமைக்க வடசட்டி
சட்டி சட்டி மண்சட்டி
அப்பாத்தா வீட்டு வடசட்டி
சட்டி சட்டி வெறுஞ்சட்டி
ஆக்கி தின்னா படுசுட்டி
பாட்டி சிரிச்சா கைதட்டி
கார்த்திகா சுந்தர்




Monday, 22 October 2018

9 to 1 கொலு

9 நாள் திருவிழா
8 திக்கும் தேவர்கள்
7 மலை கடல் தாண்டி பாரம்பரியம்
6 சுவை பிரசாதம்
5 பூதங்கள் ஆசிர்வாதம்
4 திசை எங்கும் மக்கள் வெள்ளம்
3 மூர்த்திகளின் அருள்
2 கண்கள் முழுதும் பூரிப்பு
1 மனச சந்தோஷங்கள்
நவராத்திரி கொண்டாட்டங்கள்

கார்த்திகா சுந்தர்

பிளாக்கர் ஜோக்கர் யாக்கர். Blogger joker yaker

நான் நடந்து பழகியதோ வாக்கர்

தடுக்கி விழுந்து நடந்த போது ஜோக்கர்

சமைக்கும் போது நான் பேக்கர்

குடும்ப தலைவியான பின் கோம் மேக்கர்

இடைவிடாது பேசும் போது டாக்கர்

வேலை தேடி அலையும் போது ஸ்சீக்கர்

எழுத்து பசிக்கு தீனி போட்டது பிளாக்கர்

எழுத்து மூலம் சொல்லி அடிச்சபோது யாக்கர்

கார்த்திகா சுந்தர்

பொசு பொசுங்கும் குட்டி பாப்பாவின் போனஸ் தீபாவளி

பட பட வென தீபாவளி
சட சட வென சரவெடி
கட கட வென கம்பி மத்தாப்பு
சறு சறு வென சாட்டை நூல்
புஷ் புஷ் என புஷ்வானம்
சர் சர் வென கம்பி மத்தாப்பு
புர் புர் வென பூந்தொட்டி
டர டர வென ராக்கெட்டு
மட மட வென மாத்திரைகள்
சுரு சுரு வென மெர்குரி
டம் டம் என ஆட்டோபாம்
டும் டும் என அணுகுண்டு
டுப் டுப் என பொட்டு வெடி
சிட் சிட் என சீனிவெடி
டமார் டமார் என லெட்சுமி வெடி

இத்தனையும் வெடிக்கனுமே
அத்தனையும் பத்தாம இன்னும் கொஞ்சம் வாங்கனுமே
புத்தாடை உடுத்தனுமே
பலகாரம் திங்கனுமே
கொண்டாடி மகிழனுமே
அப்பாகிட்ட கேட்கனுமே

ஆசையோடு நான் இருக்க
அப்பா இன்னும் காணலியே
ஆபிசு இன்னும் முடியலியே
என்னாச்சு ஏதாச்சு
நான் இங்கு காத்துருக்கேன்

வாடிய முகத்துடன் அப்பா வர
ஓடியே நானும் முத்தமிட

போனஸ் இல்லனு செல்லிட
வாடிய முகத்துடன் நான் அழ
பட்டாசு கனவெல்லாம் பொசு பொசுங்க
தீபாவளி திருநாள் இங்கு வலி நாளாம்
ஏழையின் வீட்டுக்கு கனவில் வருமே தீபாவளி...

 கார்த்திகா சுந்தர்





Sunday, 21 October 2018

சோத்து கனவு

உங்கள் கனவுகளை உழுது விடுங்கள்
எண்ணங்களை விதையாய் நட்டு விடுங்கள்

செயல்களை உரமாய் தூவி விடுங்கள்
கண்ணீரை நீராய் பாய்ச்சி விடுங்கள்

ஏக்கத்தை காலங்களாக காக்க விடுங்கள்
துரோகத்தை பக்குவமாய் களை எடுங்கள்

அன்பை ஆசையாய் அறுவடை செய்யுங்கள்
பாசத்தை பதமாய் பதர் அடியுங்கள்

உழவு கனவு பலித்திடுமே
உள்ளங்கள் மகிழ்ச்சி கொண்டிடுமே

சந்ததி சோறு தின்னிட
சாகும் வரை உழைத்திட
கனவு என்றும் பலித்திட
ஆசை கொண்டேன் மனதிலே...

கார்த்திகா சுந்தர்


பிளாஸ்டிக் புதையல்

நம் வாழ்வின் தொடக்கமே இயற்கை
நம் வாரிசுகளின் தொடக்கமோ செயற்கை

பிறந்த நாள் முதல்
இறக்கும் நாள் வரை பிளாஸ்டிக்

நாம் இதுவரை பூமியை தோண்டி எடுத்து வந்த எல்லாமே செல்வங்கள் தான்.

நிலத்தடி நீர்
தங்கம்
வைரம்
வைடூரியம்
நிலக்கரி
இரும்பு
செப்பு
தாமிரம்
 இன்னும் பல ஏராளமாக உள்ளன.


நாம் இதுவரை வாழ்க்கை முழுவதும் அனுபவித்து கொண்டு இருக்கும் அத்தனை வளங்களும் நாம்மோடு அளித்து விட்டு போகும் வழியில் நாம் அனைவரும் வாழ்கிறோம்.

இந்த நிலையை மாற்ற வேண்டும்
இந்த நிலையை மாற்ற முடியாத நிலையில் இருக்கும் அத்தனை பேரும் நம் வாரிசுகளின் தொடக்கம்
செயற்கையான
போலியான
விசம் மிகுந்த வாழ்வாதாரத்தை புதையல்களாக வழங்க காத்திருக்கிறோம்.

நம்மை பார்த்து நம்மை போல் பூமியை தோண்டி வளங்கள் கிடைக்கும் என்று நம்பி ஏமாந்து போக போகுது நம் சந்ததிகள்.

பூமியை தோண்ட தோண்ட பிளாஸ்டிக் குப்பைகள் மட்டுமே புதையல்களாக கிடைக்கும்.

இதை அறிந்த நான் திரிந்திவிட்டேன்.
பிளாஸ்டிக் குப்பைகள் மண்ணுக்கு விசம்.

மழை காலங்களில் மழை நீரை சேமித்து வைத்துக் கொண்டு கோடை காலத்தில் இன்பமா நீரை எடுத்து பயன்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த உதவுங்கள்.

சந்ததிகள் சந்தோஷமாக வாழ வேண்டும்.
பூமியில் பொக்கிஷங்களை விதையுங்கள்..
மரம் காப்பாற்று நம் சந்ததிகளை.
 வேண்டாம் பிளாஸ்டிக்.
 கார்த்திகா சுந்தர்


கிருக்கியின் கிறுக்கல்கள்


சிறு கிறுக்கல்கள்
சில நேரங்களில்
சில மனிதர்களின்
வாழ்க்கை வரலாற்றை எல்லாம் புரட்டி போட்டு மாற்றத்தை கொண்டு வரும்.

ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு சக்தி வாய்ந்த திறன் உள்ளது.

அப்படி என் கைவிரல் அடையாள படுத்தும் கிறுக்கல்கள் என்றாது ஒரு நாள் மிக நல்ல மாற்றத்தை நமக்கு ஏற்படுத்தும்.

மனம் மகிழும். இது எல்லாம் நடக்கும்.
வாசகர்களின்  ஆர்வம் ஆசிர்வாதம்
இரண்டு சேரும் போது......

நன்றிகள் பல கூறி ...

நம்பிக்கையுடன் நான்
கார்த்திகா சுந்தர்...


தென்றல் தாலாட்டு


தென்றல் காற்று வீசுதம்மா ...
பால் நிலா வந்ததம்மா ...

பகலவன் இனிதாய் சென்றானே ...
இரவும் இனிதாய் வந்ததம்மா ...

நட்சத்திரங்கள் ஜொலிக்குதம்மா ...
மின்மினி பூச்சியும் மின்னுதம்மா ...


கண்ணுரங்கு கண்மணியே ...
பொண்ணுரங்கு பொண்மணியே ...

ரே ... ரே... ரே...
ஜூ... ஜூ ... ஜூ...

கார்த்திகா சுந்தர்


பட்டாபட்டி தாத்தா பணம்


பணம் பணம்
பட்டாபட்டி பணம்

குணம் குணம்
பத்திரமாத்து குணம்

தினம் தினம்
பொன்னான தினம்

மனம் மனம்
மாசு இல்லா மனம்

கணம் கணம்
மடியில் இல்லை கணம்

ரணம் ரணம்
மனசெல்லாம் ரணம்

தெனம் தெனம்
நாட்கள் கழிந்தன தெனம்

இனம் இனம்
ஆசை பிடிச்ச மனுஷ இனம்

பிணம் பிணம்
ஆன பட்டாபட்டி தாத்தா பிணம்

மணம் மணம்
தாத்தாக்காக ஊதுபத்தி  மணம்

பணம் பணம்
என போன சொந்த பந்தம்

பிணத்து முன்ன கூடுச்சம்மா
மனம் திரிந்து சேந்துச்சம்மா

உசுரோட இருக்கையில
ஒரு ஜனம் இல்லையம்மா

உசுரு பிரிஞ்சு போனபின்ன
ஊரு ஜனம் கூடுதம்மா

பட்டாபட்டி தாத்தா மேல
பாசம் இப்போ பொங்குதம்மா

திடீர் பாசம் கொட்டுதம்மா
இது எல்லா

பாசமா...
வேசமா ...
பணம் செய்யும் மோசமா...

என்னானு புரியலையே ...
ஏதுனு தெரியலையே ...

பட்டாபட்டி தாத்தா என்ன
தவிக்க விட்டு போனதென்ன ...

கண்ணில் நீர் வடிய
நெஞ்சில் வலி நிரைய
செல்ல தாத்தா நினைப்போட
உன்ன நினைச்சு அழுகும்
செல்ல பேத்தி நான் தானே .....

கார்த்திகா சுந்தர்


















Saturday, 20 October 2018

மிதக்கும் மெட்ராஸ்

வயிற்றிலோ ஆறு மாத சிசு
வாசலீலோ அரைஅடி தண்ணீர்

ஏழாமாசம் வளைகாப்பு
எட்டு திக்கும் வெள்ளகாடு

மிதக்கும் மெட்ராஸ் ஊரினிலே
முழுகாமல் நானு மிதக்குறேனே

வளைகாப்புக்கு வந்த சொந்தம்
வாயடச்சு போனதம்மா

சட்டி சட்டியா காப்பு சோறு
வட்டி வட்டியா திண்ண சோறு

எல்லாம் வீணா போனதம்மா
வெள்ளம் வந்து புகுந்ததம்மா

கதிரவன் வெளிச்சம் இல்லையம்மா...
கரண்டு  வெளிச்சம் இல்லையம்மா...

கருங்கும் இருட்டு எங்கும்
கண்ணுமுண்ணு தெரியலீங்க

மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து
தலைவாழை விரித்து வைத்து

ஏழு சோறு பந்தி வைச்சு
எட்டு டஜன் விளையலிட்டு

வந்த ஜனம் நனைந்து நடக்க
வாயும் வயிறுமா நா கிடக்க

மழை வெள்ளம் பெருக்கெடுக்க
மெட்ராசோ அதில் மிதக்க

என் தகப்பனோ மகள் கையை பிடிக்க
என் கணவனோ மனைவியை ஏந்த

இருவரும் எனை கைதாங்கலாக
முழுகாமல் இருக்கும் எனை மூழ்கடிக்கும் நீரோ

கருவில் உள்ள குழந்தை இழுத்து வாரி போக
கண்டபடி ஓடும் காட்டு வெள்ளம் போல

இடுப்பு வரை நீண்ட வெள்ளத்தில்
சிசுவும் மிரள தாயும் மிதக்க பள்ளத்தில்

இடராது பக்குவமாக நடக்க
கணவனும் தகப்பனும் நனைக்க

சொந்த பந்தம் எல்லாம் கலங்க
தப்பிபிழைத்து ஊரு போய் சேர

பத்து மாதம் பத்திரமாய்
பிள்ளை பிறந்தது ரத்தினமாய்

மறக்க முடியாத நினைவுகள்


கார்த்திகா சுந்தர்







 கார்த்திகா சுந்தர்




சைக்கிள் டயர்


முதல் முறையாக வண்டி ஓட்டிய அனுபவம்

டயர் வண்டி
டயர் வண்டி
டாடா சொல்லி
டயர தட்டி
நேரா விட்டா
சீறிப்பாயும் சின்ன வண்டி

குட்ட வண்டி
குழந்தை வண்டி
ஒத்த வண்டி
வட்ட வண்டி
ஓட்டி பாரு
ஊரே சுத்தும் சின்ன வண்டி

இரண்டு சக்கர வண்டியோ
நாலு சக்கர வண்டியோ
ஆறு சக்கர வண்டியோ
தேவையில்லையே

ஒய்யார வண்டியே
ஒத்த சக்கர வண்டியோ
நட்ட நடு வீதியிலே
டக்கரு வண்டியடா
டயர் வண்டியடா

கார்த்திகா சுந்தர்



திருமணம் முதல் காதல் வரை



விரும்பாத நொடியில்
பிடிக்காத சுடியில்

உறவுகளின் நடுவில்
அமைதியின் வடிவில்

சூழ்நிலையின் பிடியில்
ரோஜா மலராய் செடியில்
முத்தாய் வந்த முத்துச்சுடரில்

மனதை உருக்கிய உன் சிறு பார்வை
மெழுகாய் கரைந்த அழகு பதுமை

மனமுருகி உன் கையால் மல்லிகை சூடி
பந்தங்கள் எல்லாம் சொந்தங்களாக

முதல் காதல் மனதில் பூக்க
முழு வேகமாய் மாதங்கள் ஓடிட
முகூர்த்த நாளே வந்து நிற்க

இடிகள் இடிக்க மேளங்கள் முழங்க
வெடிகள் வெடிக்க நாதம் இசைக்க

ரோஜா மாலை விழும் வேளை
எனக்கு தங்க வளையம் நீ விரலில் சூட
இருமனம் சேரும் திருமணம் நாளை...

விடியும் பொழுது கனவாய் இருக்க
முத்து விழியும் பதுமை பெண்ணும்

தூங்கா இரவும் காதல் கனவும்
உனக்கும் எனக்கும் நடுவே ஓட

சூரியன் உதிக்க காதல் மலர
கோபுரம் அடியில் முருகன் அருளால்

நீ மாலை சூடி தாழி ஏந்தி
எனை பார்த்த அந்த நொடி

உச்சி சிலிர்க்க பாதம் கூச
வெட்கம் கலந்து என் முகம் சிவந்து
தாழி வாங்க தலை குனிந்து

மாலை மாற்றி மெட்டி சூடி
அருந்ததி பார்த்து அக்கினி சுற்றி

சுற்றமும் நட்பும் மகிழ்ந்தே வாழ்த்த
உன் சுண்டு விரலால் என் கைவிரல் கோர்த்து

இறைவனை துதித்து இருமனம் கலந்து
நூறு ஆண்டுகள் காதல் பறவையாய் பறப்போம் வாராய்...

முத்து கணவா
முதல் காதல்
 மலர்ந்தது நெனைவா....
என்றும் உன் காதல் பொண்டாட்டி....

கார்த்திகா சுந்தர்










Friday, 19 October 2018

முந்தானை தூழி

பாட்டி வீட்டு தோட்டம்
தாத்தா நட்ட மரங்கள்

பச்சை பசுமை சோலை
பூத்து குலுங்கும் வேளை

பரீட்சை முடிந்தா போதும்
சிட்டாய் பறப்போம் பாரு

 பேரன் பேத்தி எட்டு
விடுமுறை நாளோ பத்து

பாட்டி சேலையை வெட்டி
தாத்தா கட்டும் தூழி

ஆட்டம் போடும் சுட்டி
முந்தானை தூழி கட்டி

பிறந்த வீடும் அதுவே
வளர்ந்த வீடும் அதுவே

பாட்டி சேலையில் தூழி
பேத்தி தூங்கும் லாலி

முந்தானை தூழி வாசம்
மறவா நினைவின் நேசம்...
கார்த்திகா சுந்தர்





எந்திர பறவை

வான் முட்டும் எந்திர பறவையே
உனை சிறகடிக்க சொன்னது யாரோ

என் குழந்தை தூங்கும் நேரம்
உனை சத்தமாய் பறக்கவிட்டது யாரோ

சிறு குழந்தை உனை ரசிக்கும் முன்
புகையை கக்கிவிட்டு பறந்தது ஏனோ

தத்தி தவழ்ந்து வரும் முன்பே
விமான பறவையே பறந்துவிட்டாயே

எந்திர பறவை நீ மறைய
எச்சம் ஈடும் காகம் வானில் பறக்க

விமானம் என்று குழந்தை சிரிக்க
அம்மா நானே சேர்ந்தே மகிழ்ந்தேன்...
கார்த்திகா சுந்தர்
 



முத்து தமிழ் செல்வன்

முத்தே மணி முத்தே
முத்தமிழ் செல்வானே

என் இதயம் கவர்ந்த கள்வனே
உன் உயிர் வாழும் பதுமையாய்

காலம் முழுதும் அழியா ஓவியமாய்
உன் விரல் பட்டு மலரும் காவியமாய்

 நவம்பர் மாத பூக்களாய்
பூத்தது நம் வாழ்வின் தொடக்கமே....

கார்த்திகா சுந்தர்

கணவன் கடவுளின் தூதன்

கணவா கணவா
கடவுளின் தூதா

கண்ணில் வைத்தா
எனை காத்தாய் கணவா

இல்லை நெஞ்சில் வைத்தா
எனை காத்தாய் கணவா

கனவில் வந்த கணவா
கலைந்த கனவின்  நினைவா

கடலின் அழகிய முத்து  நானா
எனை கண்டெடுத்த முத்து சிற்பி நீயா

தோழனாய்  வந்த  கணவா
தகப்பனாய் மாறிய உறவா

உயிரும் உடலும் இரண்டா
உண்மை நிலையை அறியா

சிறு பேதை பெண்ணும் நானா
இல்லை பதுமை பொம்மையாக

உனை சுற்றி திரியும் மானா
என்னை காக்கும் கடவுளின் தூதா

நீ அறிவாயோ
 நீ அறிவாயோ

நான் தேவதையாய் வந்தா உன் தாயே...
இல்லை சிறு பதுமையாய் வந்த சேயா...

மகிழ்ச்சியின் மலை ஊற்றாய்
சிறு பறவையாய் பறப்போம் வாராய்

கார்த்திகா சுந்தர்














தண்டோரா தமிழ்

எழுதும் எழுத்து என்  மூச்சு
என் தாய் மொழி தமிழ் என் பேச்சு
என் கருத்து பரவ வேண்டும்
நல்லது நடக்க வேண்டும்
புது பூமி மலர வேண்டும்
என் தமிழை வளர்க்க மறுபிறப்பு எடுக்க வேண்டும்
என் பேனா என் வலிமை
பேனா மை என் குருதி
சொல்ல வேண்டியதை எல்லாம் என் மூச்சு உள்ள வரை என் மக்களுக்கு சொல்லி விட்டு போக வேண்டும். 
கார்த்திகா சுந்தர்